ஞாயிறு, டிசம்பர் 04, 2011

இயற்கை மருத்துவம் - உணவு அட்டவணை.


மேலே காணப்படும் உணவு அட்டவனையை பொறுத்து நாம் உண்ணும் உணவில் அமிலத்தன்மை ஒரு பங்கும், காரத்தன்மை மூன்று பங்கும் இருக்குமாறு அனுசரித்து நம்முடைய உணவு பழக்கவழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். நூறு சதவீதம் கனகச்சிதமாக இல்லாவிட்டாலும் முடிந்தவரை முயற்சி செய்யலாம். அமிலத்தன்மை உடலில் அதிகமாக அதிகமாக நோய்கள் வருவது உறுதி. குறிப்பாக தொற்று நோய்கள் (இன்பெக்டிவ் டிசீஸ் ) வரும் வாய்ப்பு அதிகம். மனித உடலானது தன்னிடம் பற்றாக்குறையாக உள்ள காரச்சத்தை எலும்புகள், நரம்புகள், திசுக்களில் இருந்து தானாகவே எடுத்துக்கொள்கிறது. இதன் காரணமாக மூட்டுவலி, நரம்பு தளர்ச்சி, தசைவலி போன்ற பிரச்சினைகள் வந்துவிடும். ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள அமிலச்ச்த்தை உடலானது சிறுநீரகம் வழியாக வெளியற்ற முயல்கிறது. இதன் விளைவாக சிறுநீரங்கள் செயலிழக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் இயற்கை மருத்துவ நிபுணர்கள். இந்த உண்மைகளை எல்லாம் நீங்களே உங்கள் அனுபவத்தில் சுயமாகவும், பிறரோடும் ஒப்பிட்டு பாருங்கள்.....பிசகாத சத்தியம்.


திருமூலர், உத்தமன் கோயில் கொண்டுள்ள மனித உடலை ஓம்ப வேண்டும் என்கிறார். உத்தமனுக்காக ஒம்புகிறமோ இல்லையோ, குடும்பத்தினருக்கு உபத்திரவம் தராமல் இருக்கவாவது நாம் நம் உடலை பேணிப் பாதுகாக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நோய் கண்டுவிட்டால் மற்ற குடும்ப உறுப்பினர்கள் எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது.


ஆங்கில மருத்துவத்தில் , எப்பேர்பட்ட நோய்க்கும் வைத்தியம் உண்டு. நோய் வந்த பின், சிகிச்சை உண்டு - குணமாக்கி விடலாம் என்பது சிறப்பல்ல. நோயே வராமல் காத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். உதாரணமாக, புற்றுநோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் கீமோ தெரபி குடுப்பார்கள். புற்று நோய் சரியாகிறதோ இல்லையோ பக்கவிளைவுகளால் நோயாளி கடைசியில் நொந்து நூலாகி ஒரு வழியாகி விடுவார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு சைக்லோஸ் போரின் என்ற ஒரு மருந்து தருகிறார்கள். அது உடலில் என்ன வேலை செய்கிறது என்று இன்டர்நெட்டில் தேடிப்பாருங்கள். அதை நினைத்தாலே மனக்கலக்கமாக இருக்கிறது. விபத்துகள், அசம்பாவிதங்கள் போன்றவை நம் கட்டுபாட்டிற்கு அப்பாற்பட்டவை. ஆனால் பிரசவம், மூளைக்கட்டி ,விபத்துகள் போன்றவைகளுக்கு ஆங்கில மருத்துவம்தான் சிறந்தது என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். நான் ஆங்கில மருத்துவமுறையை குறை கூறவில்லை. இதுதான் நாட்டில் இன்றைய நிலவரம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக