வெள்ளி, டிசம்பர் 30, 2011


  
மதத்தின் இரகசியம்

மனிதனில் ஏற்கனவே இருக்கிற தெய்வீகத்தை வெளிபடுத்துவதே மதம்.

மதம் என்பது ஆன்மா சம்பந்தப்பட்டது,
சமூக விஷயங்களில் தலையிட அதற்கு எந்த உரிமையும் இல்லை என்பதைக் குறிப்பாக நீங்கள் நினைவில் வைக்க வேண்டும்.
ஏற்கனவே விளைந்துள்ள தீமைகள் அனைத்தும் அப்படித் தலையிட்டதன் காரணமாகவே என்பதையும் மறக்க்க் கூடாது.

ஒரு மதம் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் அது உத்வேகம் மிக்கதாக இருக்க வேண்டும்.
அதேவேளையில் அதில் உட்பிரிவுகள் பெருகிக் கொண்டே போகின்ற அபாயத்தையும் தடுக்க வேண்டும்.
பிரிவினைவாதம் அற்ற பிரிவாக இருப்பதன் மூலம் இதை நாம் தடுக்க முடியும்,
ஏனெனில் இதில் ஒரு பிரிவிற்கான அனுகூலாங்கள் அனைத்தும் இருக்கும்,
உலகம் தழுவிய ஒரு மத்த்திற்கான பரந்த தன்மையும் இருக்கும்.

எப்போது ஆன்மா அன்பான இறைவனின் தேவையை, ஆசையை, ஏக்கத்தை உணருமோ அப்போதுதான் மத உணர்வே ஆரம்பிக்கிறது, அதற்கு முன்பு அல்ல.

மதத்தின் இரகசியம் கொள்கைகளில் இல்லை, செயல்முறையில்தான் உள்ளது.
நல்லவனாக இருப்பது,
நன்மை செய்வது
இதுதான் மத்த்தின் முழுப்பரிமாணம்.

புலன்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் ஆசை தோன்றும் போதுதான்
மனிதனின் இதயத்தில் மத உணர்வு உதயமாகிறது.
ஆகவே மனிதன் புலன்களுக்கு அடிமையாகாமல் தடுப்பதும், அவன் தன் சுதந்திரத்தை வலியுருத்த உதவி செய்வதும்தான் மதத்தின் முழு நோக்கம்.

என்னென்ன தீமைகளுக்கு மதம் காரணம் என்று சொல்கிறார்களோ அவை எதற்கும் மதம் காரணமாக அல்ல.
எந்த மதமும் மனிதர்களைகளைக் கொடுமைப் படுத்தவில்லை, எந்த மதமும் சூனியக்காரிகளைக் கொளுத்தவில்லை,
எந்த மதமும் இத்தகைய செயல்களைச் செய்யவில்ல. அப்படியானால் இவற்றைச் செய்யும் படி மக்களைத் தூண்டியது எது?
அரசியல்,
ஒருபோதும் மதம் அல்ல.
மதமத்தின் பெயரில் அரசியல் நிலவுமானால் அது யாருடைய தவறு ?

மனிதன் இறையனுபூதி பெற வேண்டும், அவரை உணர வேண்டும், அவரைப் பார்க்க வேண்டும், அதுதான் மதம்.

மதம் என்பது அனுபூதி.
வெறும் பேச்சோ,
நம்ப முயற்சிப்பதோ,
இருட்டில் தேடுவதோ,
முன்னோர்களின் வார்த்தைகளைக் கிளிப்பிள்ளை போல் ஒப்பித்துவிட்டு அதுதான் மதம் என்று நினைப்பதோ,
மத உண்மைகளை அரசியலாக்குவதோ மதம் அல்லவே அல்ல.

ஒரு லட்சிய மதத்தின் நோக்கம்
இந்த வாழ்விற்கும் உதவ வேண்டும்.
மறு உலகிற்கும் வழிகாட்ட வேண்டும்.
அதே வேளையில், மரணத்தை ஏற்க அது ஒருவனை ஆயத்தம் செய்யவும் வேண்டும்.

மதத்தை பற்றிக்கொண்டு சண்டையில் இறங்காதே,
மதச் சண்டைகளும் வாதங்களும் அறிவின்மையின் அறிகுறி. தூய்மையும் அறிவும் வெளியேறி, இதயம் வறளும்போதே சண்டைகள் தொடங்கும், அதற்கு முன்னால் அல்ல.

கொள்கைகளையோ, நம்பிக்கைகயையோ, மதப் பிரிவுகளையோ கோயில்களையோ பொருட்படுத்தாதே. ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையிலும் சாரமாக அமைகின்ற அறிவுடன் ஒப்பிட்டு பார்த்தால் அவை என்ன?
ஒரு மனிதனிடம் இந்த அறிவு முதிரும் அளவிற்கே,
நம்மை செய்யும் ஆற்றல் அவனிடம் அதிகாரிகின்றது.
முதலில் அந்த அறிவை தேடிப் பெறு. யாரையும் குறைகூறாதே.
ஏனேனில் எல்லா கொள்கைகளிலும் முடிவுகளிலும் சிறிதாவது நன்மையுள்ளது.
மதம் என்பது கொள்கைகளோ கோட்பாடுகளோ அல்ல, அனுபூதியே மதம்.
அதை உனது வாழ்க்கையில் காட்டு.















சனி, டிசம்பர் 17, 2011


பயம், சந்தேகம், சலனம் வேண்டாம்


ஒன்று கூடிக் கடவுளை வணங்கிச் செல்லும் போது, 

மனிதர்களின் மனங்கள் ஒருமைப்பட்டுத் தமக்குள் இருக்கும். 

ஆத்மவொருமையை அவர்கள் தெரிந்து கொள்ள இடமுண்டாகும். 

எனவே தான் நம் முன்னோர் கோயில்களை உருவாக்கினார்கள்.

சிவன் நீ; சக்தி உன் மனைவி. விஷ்ணு நீ; லட்சுமி உன் மனைவி.
பிரம்மா நீ; சரஸ்வதி உன் மனைவி. 

இதைக் காட்டி மிருக நிலையிலிருந்து மனிதரை தேவநிலைக்கு 
கொண்டு சேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப்பள்ளிக்கூடங்களே கோயில்கள் ஆகும்.

சகுனம் பார்க்கும் வழக்கமும் காரியங்களுக்குப் பெருந்தடையாக வந்து கொண்டிருக்கிறது.

சகல மனிதரும் சகோதரர். சகோதர உணர்ச்சியைப் பற்றி கவிதைகள் பாடுவதும், நீதி நூல்கள் புகழ்வதும் இவ்வுலகத்தில் சாதாரணமாக இருக்கிறது.

 ஆனால், நடைமுறையில் எந்தக் கண்டத்திலும் எந்த மூலையிலும் அந்த முயற்சி காணப்படவில்லை. அது நடைமுறைக்கு வர வேண்டும்.

சக்தியால் உலகம் வாழ்கிறது. நாம் வாழ்வை விரும்புகிறோம்.
ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்.

 ஒவ்வொருவனுக்கும் அறிவு, செல்வம், தைரியம் ஆகிய மூன்று சக்திகள் வேண்டும். 
இந்த மூன்றும் நமக்கு இகலோக இன்பம் கிடைக்கும்படியாகவும், 

பரலோக இன்பங்கள் சாத்தியமாகும் படியாகவும் செய்கின்றன. ஆத்மா உணர்வாகவும், சக்தி செய்கையாகவும் உள்ளது.

விரும்புதல், அறிதல், நடத்துதல் என்ற மூவகையான சக்தி இல்வுலகத்தை ஆளுகிறது. 

இதை பூர்வ சாஸ்திரங்கள் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று சொல்கின்றன. 
பயம், சந்தேகம், சலனம் மூன்றையும் வெறுக்க வேண்டும். 
இதனால் சக்தி ஏற்படும்.




வியாழன், டிசம்பர் 15, 2011



உண்மையான நல்ல தமிழர்கள் யார்?



யார் யாரெல்லாம் தங்கள் கலாச்சாரம் பண்பாடுகளைப்பேணி இல்லாதவர்கள் இல்லை நம் இனத்தில் என்று சொல்லும் வண்ணம் நல்லுள்ளத்தோடு ஏழ்மையில் இருப்போருக்கும் தங்களால் ஆன உதவிகளை செய்து வாழ்கின்றார்களோ அவர்களே நல்ல தமிழர்கள் மட்டுமின்றி உயர்ந்த மானிடர்களாகின்றார்கள் இவ்வுலகில்.
இன்று நாம் வளிநாடுகளில் உணவுக்கு வறுமையற்ற வாழ்வினை மேற்கொண்டிருக்கின்றோம்
ஆனால் நம்முடன் நாம் பிறந்த நாட்டில் பிறந்தவர்கள் தமிழர்கள் என்பதனால் பலவழகளிலும் வறுமையின் பிடிக்குள் திண்டாடுகின்றார்கள்,
செய்ய வேண்டியது ஒன்றே உங்களுக்கு மனமிருந்தால் நேரடியாக தேடிப்பிடியுங்கள் ஒரு துயருறும குடும்பத்தையோ நபரையோ பின்னர் உங்களாலான உதவியினை செய்யுங்கள் , நமது உறவினர்களுக்கு கொடுப்பது எல்லோரும் செய்துகொள்ளும் விடயமே ஆனால் நம்மை அறியாதவர்களுக்கு கொடுத்து அதை அவர்கள் வாங்கி மகிழும் பொழுதுதான் உங்கள் மனத்தில் ஒரு பொன் விளக்கொளி பிரகாசிக்கும் என்பதனை உணர்வில் தெரிந்து கொள்ளலாம்.
நக்கீரனின் அண்மைக்கால செய்திகளின் படி நமக்கு மிகுந்த வேதனை தரும் செய்தி என்னவெனில் பாடசாலை ஆசிரிய ஆசிரியைகளே தமது மாணவ மாணவிகளுடன் தவறாக நடந்த நடக்க முயற்சித்தமை ,இது பலராலும் சகிக்கமுடியாத ஒன்றே ,தொழிலின் மீதான பக்தியின்மை மற்றும்
சமுதாயத்தில் தனது தொழிலுக்குரிய மரியாதை, நம்பிக்கை போனறவற்றை அறிந்து கொள்ளாமையே இந்த இழிசெயலுக்கு காரணம். தனக்கு கொடுக்கப்படும் மரியாதையை மதிப்பை தவறாக உபயோகிக்க முனைதல், வாழ்க்கையில் பெருங்களங்கததை உண்டுபண்ணி விடுகின்றது.
ஒரு சிலர் செய்யும் தவறு பண்புமிக்க புனிதமான ஆசிரியர்களுக்கும் அவப்பெயரை உண்டாக்கவல்லது.
மனதுக்குள் ஆசையில்லாத மனிதனே கிடையாது என்று வைத்துக்கொண்டாலும் , தான் சார்ந்த தொழில் சமூகவொழுக்கம் போன்றவற்றை கருத்தில்க்கொண்டு அடக்கம் பேணி வழ்பவரையே உலகம் போற்றும்,இதில் தனியாக ஆண்மக்களை மட்டும் குற்றம் சொல்லுவது பொருந்தாது
பெண்களும் ஆண்கள் மனங்களை சபலப்படுத்தாது தங்கள் நடை உடை அலங் காரங்களை பேணுதல் வேண்டும், பேரறிஞர் அண்ணாவின் கருத்து
இந்நேரத்தில் நினைக்கத்தக்கது “பெண்கள் அழகிகளாக இருக்கலாம் , ஆண்மயக்கிகளாக இருக்கக்கூடாது நமது முன்னோர்கள் பாதுகாப்புக்கருதியே பாலியல்த் தொல்லைகளுக்கு பெண்கள் ஆளாகக்கூடாது என்னும் நோக்கில் அதிகூடிய அலங்காரங்களுக்கு பண்பாட்டில் இம்கொடுக்காமல் சிறந்த செயல்முறைகளை சொல்லிவைத்தார்கள் , அதிலொன்று உதட்டுமேலே சிவப்பு சாயம் தீட்டாதே – கொவ்வை இதழ்கள் என்று இலக்கியத்தில் நாயகியை வருணிக்கின்றர்கள் என்றால் இயற்கையாக எந்த தீட்டுதலுமின்றி அவள் உதடு சிவப்பாக இருந்தது என்று பொருள்,
அதைப்படித்துவிட்டு கடையில் மூட்டைகட்டி சிவப்பு சாயம் வாஙகிவந்து தீட்டோ தீட்டென்று தீட்டினால் உதடு சிவப்பாகிவிடுமா, நமது தமிழ் மரபுக்கென்று இருக்கும் பண்பாடுகளை கடக்க முனையும் ஒவ்வொருவருக்கும் மறுமுனையில் ஆபத்து விரிந்து காத்துக்கிடக்கின்றது என்பதனை மக்கள் உணரவேண்டும். நமக்கு பொருந்தாதவற்றில் மோகம் கொள்ளுதல் அறிவாகாது ,தாய் தந்தையர் சொல்கேங்கள் ஏன் எதற்கு என்று சிந்தித்துக்கொள்ளுங்கள்.
அறிவுரை கூறுவோரை அவமரியாதை செய்வது இன்று பெருகியுள்ளது ,பிள்ளைகளுக்கு அடிக்க கூடாது என்னும் நாகரிகத்தில் வாழ்ந்து வருவதால் பிள்ளைகளின் சுதந்திரம் தவறான வழிகளுக்கு செல்லுவதற்கு இடம் கொடுக்கின்றது என்றால் மிகையில்லை, அன்றாடம் வேலைக்கு
சென்றிருக்கும் பெற்றோர்கள் தங்கள் பிளளைகளை நினைந்து மனதுக்குள் பெரும் பயம் கொண்டிருப்பது அவரவர் உள்ளமே அறியும் காரணம்
மான உணர்வுக்கு வாழ்வில் முக்கிய இடம் கொடுத்திருக்கும் இனம் எனபதினால் அந்தப்பயம்,அது பற்றி எள்ளளவும் சிந்திக்காதவர்களுக்கு எந்தக்கவலையுமில்லை .தரகர் பிடித்து பெண்பார்க்க சொன்னகாலம் போய் இன்று பெண்ணே தனக்குரியவனை இணையதில் தேடுகின்றாள்
என்னும் அளவுக்கு காலம் மாறியிருக்கின்றது,தொழில்நுட்ப வளர்வானது இனங்களின் கலாசார பண்பாடுகளையும் தூக்கிபோட்டு மிதிக்கின்ற து
இப்படித்தான் வாழவேண்டும் என்னும் உறுதியுடையோரை எதுவும் ஒன்றும் செய்ய முடியாது அவர்கள் என்றும் தங்கத்தின் தன்மையுடையவர்களே என்றும் நல்ல உண்மையான தமிழர்களாக கண்ணியமாக வாழ்க்கையை வழிநடத்திச்செல்வார்கள்.
எழுத்து
ம.இரமேசு
15 -12 -2011

சனி, டிசம்பர் 10, 2011


உன்றன் போர்க்கு அஞசுவேனோ பொடியாக்குவேன் உன்னை
மாயையே...!


மாயையைப் பழித்தல்

உண்மை அறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ ?
மாயையே !

மனத்தின் உண்மையுள்ளாரை நீ செய்வது
ஒன்றும் உண்டோ !
மாயையே !

எத்தனை கோடி படை கொண்டு வந்தாலும் மாயையே..
சித்தத் தெளிவெனுந் தீயின் முன் நிற்பாயோ ?
மாயையே!

என்னைக் கெடுப்பதற்கு எண்ணமுற்றாய் மாயையே !
நான் உன்னைக் கெடுப்பது உறுதி என்று உணர்
மாயையே !

சாகத் துணியிற் சமுத்திரமும் மட்டு மாயையே!
இந்தத் தேகம் பொய் என்று உணர்.
தீரரையென் செய்வாய்
மாயையே !

இருமை அழிந்த பின் எங்கிருப்பாய் அற்ப மாயையே!
தெளிந்து ஒருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பாயோ !
மாயையே !

நீதரும் இன்பத்தை நேர் என்று கொள்வேனா மாயையே !
சிங்கம் நாய்தரக் கொள்ளுமோ நல்லரசாட்சியை
மாயையே !

எண்ணிச்சை கொண்டு உன்னை எற்றிவிட வல்லேன் மாயையே !
இனி உன்னிச்சை கொண்டெனக் கொன்றும் வராது காண்
மாயையே !

யார்க்கும் குடியல்யேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே !
உன்றன் போர்க்கு அஞசுவேனோ பொடியாக்குவேன் உன்னை
மாயையே...!







வெள்ளி, டிசம்பர் 09, 2011



விவேகானந்தரின் சொற்பொழிவுத் துளிகள்

விழித்தெழுந்து உன் இயல்பை நீ வெளிபடுத்து!!!!


இதோ ஒரு அற்புதமான உருவாக்கம்...!
உடலை தேராகவும்,
ஆண்மாவைச் சவாரி செய்பவராகவும்,
புத்தியைத் தேரோட்டியாகவும்,
மனத்தை கடிவாளமாகவும்,
புலன்களை குதிரைகளாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
யாருடைய குதிரைகள் நன்கு பழக்கப்பட்டு இருக்கின்றனவோ,
கடிவாளமாகவும் உறுதியாக உள்ளதோ,
தேரோட்டி(புத்தி) அதை நன்றாக பிடித்திருக்கின்றனவோ,
அவனே எங்கும் நிறைந்திருக்கின்ற நிலையான தன் குறிக்கோளை அடைவான்...

யாருடைய குதிரைகள் (புலன்கள்) அடக்கப்படாமலும்,
கடிவாளம் (மனம்) உறுதியாகப் பிடிக்கபடாமலும் இருக்கின்றனவோ,
அவன் அழிவை நோக்கி போகின்றான்...

நீங்களே தூய்மை பொருந்தியவ்ர்கள் என்பதை உளமாற நம்புங்கள்,
ஓ மாபெரும் வீரனே!
கண்விழித்து எழுந்திரு,
இந்த உறக்கம் உனக்குப் பொருந்தது விழ்த்துக் கொள்,
எழுந்து நில்.
துன்பப்படுவனாகவும் பலவீனனாகவும் உன்னை நீ நினைக்காதே...

எல்லாம் வல்ல ஆற்றல்படைத்தவனே!
விழித்தெழுந்து உன் இயல்பை நீ வெளிபடுத்து.
உன்னை நீயே பாவி என்று நினைப்பது உனக்கு பொருந்தாது.
உன்னை நீயே பலவீனன் என்று கருதுவதும் உனக்குப் பொருந்தாது. 


வியாழன், டிசம்பர் 08, 2011


தர்மயுத்தம் செய்ய துணிந்துவிடு ....

முடிவு காணமுடியாதவன்,
சிந்தனைக்கு அப்பாற்பட்டவன்,
மாறுதலே இல்லாதவன் இப்படி இவனை அறிந்து கொள், அறிந்து கொண்டு,
துன்பத்தை கைவிடு.

அல்லது, நீ இவனைத் தினமும் பிறந்து தினமும் சாகிறவன் என்று கருதினால்,
அப்போதும் திடந்தோளுடையவனே,
நீ இவன் பொருட்டு துன்பப்படுவது வீண்,

பிறந்தவர் இறப்பாரென்றால், இறந்தவர் பிறப்பாரன்றோ?
உன்னால் தவிர்க்கமுடியாத இந்த நிகழ்ச்சிக்கு நீ ஏன் கலங்குகிறாய்?

பாரதச் செல்வனே ; உயிர்களின் ஆரம்பம் தெளிவாகத் தெரியவில்லை,
நடுநிலைமை ( வாழும் காலம் ) தெளிவாக இருக்கிறது.
முடிவும் தெளிவாக இருக்கறது.
இதில் துன்பப்படுவதற்கு என்ன இருக்கிறது?

இந்த ஆன்மாவை வியப்போடு ஒருவன் பார்க்கிறான்,
வியந்து ஒருவன் பேசுகின்றான்,
வியப்போடு ஒருவன் கேட்கிறான்,
ஆயினும், எவனும் இவனை அறிந்ததில்லை.

அர்ஜுனா! எல்லாருடம்பிலும் உள்ள இந்த ஆத்மா கொல்ல முடியாதவன்.
 ஆகவே, எந்த உயிரைப் பற்றியும் நீ வருந்தவே வேண்டாம்.

இது சுயதர்மம்தானா என்று எண்ணி,
நீ அஞ்சுவது பொருந்தாது.
ஒரு மன்னனுக்கு அறப்போரைக்காட்டிலும் சிறந்த சுயதர்மம் ஏது ?

நாம் தேடி போகலாம் ஒரு போர் தானே வருகிறதென்றால்,
அது வாசலைத் திறந்து வைத்திருக்கும் பொன்னுலகம் போன்றது.
இத்தகைய போர் வாய்ப்பு கிடைப்பதே ஒரு மன்னனுக்கு இன்பம்.

இந்த அறப்போரை நீ  நடத்தாமல் விடுவாயானால்,
அதனால் சுயதர்மத்தையும் புகழையும் கொன்று, பாவத்தை எய்துவாய்.

உலகில், உனக்கு நீங்காத பழி உண்டாகும்.
ஒரு காலத்தில் புகழ்பெற்றவன்,
மறு காலத்தில் பழி எய்துவது மரணத்தைவிடக் கொடியதல்லவா?

நீ பயந்துபோய் போரை விட்டு விலகியதாய் பெருந்தேர் வீரர்கள் கருதுவார்கள்.
உன் வலிமையையும், திறமையையும் பழிப்பார்கள்.
அதைவிட கொடிய துன்பம் ஏது?

உனக்கு வேண்டாதவர்கள், சொல்லக்கூடாத வார்த்தைகளை எல்லாம் சொல்லுவார்கள்.
உன் வலிமையையும்,
திறமையையும் பழிப்பார்கள்.
அதை விட கொடிய துன்பம் ஏது?

கொல்லப்பட்டால் சொர்க்கம்,
வெற்றி பெற்றால் ராஜபோகம்.
ஆகவே, போர் செய்ய துணிந்துவிடு,
எழுந்து நில்.

இன்பம், துன்பம்,
இழப்பு, பேறு
வெற்றி, தோல்வி - இவையெல்லாம் சமமே எனக்கருது.
நீ போரில் இறங்கிவிடு,
வீரன் பாவியாகாமல் இருக்க அதுதான் வழி.

இந்த முயற்சிக்கு அழிவே கிடையாது.
இது வரைமுறையற்ற செயற்கை நிலையுமல்ல,
இந்த தர்மத்தைச் சிறது அறிந்திருந்தாலும், அது ஒருவனைப் பெரும் பயத்திலிருந்து காப்பாற்றும்.


செவ்வாய், டிசம்பர் 06, 2011



இவர்களை என்ன செய்யலாம்.....?













சமூகவலையமைப்பையும் தமிழ் இனத்தையும் சீரழிக்கும் வீனோத ஆசைமிக்கவர்கள் இவர்கள், இந்த வலையமைப்பினூடாக எத்தனையோ நல்ல விடங்களை பகிர்ந்து கொள்ளலாம்,இவர்களது முக்கிய நோக்கம் இவர்களது இணையங்களை கிளிக் செய்து பார்க்க வைப்பதே.அதாவது ஒரு செய்தியின் கீழ் வேறு இணையத்தளங்களின் முகவரி இடப்பட்டிருக்கிறதா என பாருங்கள். அவ்வாறு இருந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம். ( உதாரணமாக- newyarl.com, cirattai.com, yarlnelam.com,tamilalagan.com, tamilneethy.com  போன்றவை.........) எனுவே இந்த இணையத்தளங்களின் சொந்த வியாபார நோக்கிற்காக பெண்களது புகைபடங்களுடன் உலாவுகிறார்கள் இந்த ஈனப்பிறவிகளின் செயல்களினால வீட்டில் அமர்ந்து கூட இந்த வலையமைப்பு பார்வையிட முடியாமல் உள்ளது.  இனிவரும் காலத்தில் முகநூல் என்பது அநாகரீக வலையமைப்பு என தோற்றம்பெரும் என்பதில் ஐயமில்லை. சில பெண்கள் பள்ளிகூடங்களில் முகநூல் பாவணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் அவ்வாறு பாவிக்கப்பட்டு  பள்ளிகூட பெயர் உள்ளடக்கபட்டிருந்தால் அந்த நபர் நீக்கப்படுவார் என் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.... இந்த வலையமைப்பை புதுப்பிக்க அல்லது யாவரும், எந்த வயதினருடனும் அமர்ந்து பார்க்க கூடியதாக்குவது யாருடைய கைகளிலே..... 

ஞாயிறு, டிசம்பர் 04, 2011

இயற்கை மருத்துவம் - உணவு அட்டவணை.


மேலே காணப்படும் உணவு அட்டவனையை பொறுத்து நாம் உண்ணும் உணவில் அமிலத்தன்மை ஒரு பங்கும், காரத்தன்மை மூன்று பங்கும் இருக்குமாறு அனுசரித்து நம்முடைய உணவு பழக்கவழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். நூறு சதவீதம் கனகச்சிதமாக இல்லாவிட்டாலும் முடிந்தவரை முயற்சி செய்யலாம். அமிலத்தன்மை உடலில் அதிகமாக அதிகமாக நோய்கள் வருவது உறுதி. குறிப்பாக தொற்று நோய்கள் (இன்பெக்டிவ் டிசீஸ் ) வரும் வாய்ப்பு அதிகம். மனித உடலானது தன்னிடம் பற்றாக்குறையாக உள்ள காரச்சத்தை எலும்புகள், நரம்புகள், திசுக்களில் இருந்து தானாகவே எடுத்துக்கொள்கிறது. இதன் காரணமாக மூட்டுவலி, நரம்பு தளர்ச்சி, தசைவலி போன்ற பிரச்சினைகள் வந்துவிடும். ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள அமிலச்ச்த்தை உடலானது சிறுநீரகம் வழியாக வெளியற்ற முயல்கிறது. இதன் விளைவாக சிறுநீரங்கள் செயலிழக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் இயற்கை மருத்துவ நிபுணர்கள். இந்த உண்மைகளை எல்லாம் நீங்களே உங்கள் அனுபவத்தில் சுயமாகவும், பிறரோடும் ஒப்பிட்டு பாருங்கள்.....பிசகாத சத்தியம்.


திருமூலர், உத்தமன் கோயில் கொண்டுள்ள மனித உடலை ஓம்ப வேண்டும் என்கிறார். உத்தமனுக்காக ஒம்புகிறமோ இல்லையோ, குடும்பத்தினருக்கு உபத்திரவம் தராமல் இருக்கவாவது நாம் நம் உடலை பேணிப் பாதுகாக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நோய் கண்டுவிட்டால் மற்ற குடும்ப உறுப்பினர்கள் எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது.


ஆங்கில மருத்துவத்தில் , எப்பேர்பட்ட நோய்க்கும் வைத்தியம் உண்டு. நோய் வந்த பின், சிகிச்சை உண்டு - குணமாக்கி விடலாம் என்பது சிறப்பல்ல. நோயே வராமல் காத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். உதாரணமாக, புற்றுநோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் கீமோ தெரபி குடுப்பார்கள். புற்று நோய் சரியாகிறதோ இல்லையோ பக்கவிளைவுகளால் நோயாளி கடைசியில் நொந்து நூலாகி ஒரு வழியாகி விடுவார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு சைக்லோஸ் போரின் என்ற ஒரு மருந்து தருகிறார்கள். அது உடலில் என்ன வேலை செய்கிறது என்று இன்டர்நெட்டில் தேடிப்பாருங்கள். அதை நினைத்தாலே மனக்கலக்கமாக இருக்கிறது. விபத்துகள், அசம்பாவிதங்கள் போன்றவை நம் கட்டுபாட்டிற்கு அப்பாற்பட்டவை. ஆனால் பிரசவம், மூளைக்கட்டி ,விபத்துகள் போன்றவைகளுக்கு ஆங்கில மருத்துவம்தான் சிறந்தது என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். நான் ஆங்கில மருத்துவமுறையை குறை கூறவில்லை. இதுதான் நாட்டில் இன்றைய நிலவரம்.