வியாழன், டிசம்பர் 13, 2012




அன்புடையோர் வாழ்வில் இன்பம் அடைவது உறுதி.

* அண்ட சராசரங்கள் அனைத்தையும் நடத்தும் ஆற்றல் ஒன்று உள்ளது.
அந்த ஆற்றலையே இறைவன் என்றும்,
இயற்கை என்றும் கூறுகிறோம்.

ஒவ்வொரு மதமும் அந்த ஆற்றலை ஒவ்வொரு பெயரால் குறிப்பிடுகிறது.
பெயர் வெவ்வேறானாலும்,
அப்பெயர்களால் குறிப்பிடப்படும் இயற்கை ஆற்றல் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது.
இதனையே சமய உண்மைகள் நமக்கு உணர்த்துகின்றன.
ஆனால், சமயவாதிகள் தங்களுக்கும் மாறுபட்டு பகையை வளர்த்துக் கொள்கின்றனர்.

* ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று கூறி அலைவதெல்லாம் அறிவின்மையாகும்.
தூய்மையான அறிவுநிலையே தெய்வமாகும்.
அத்தெய்வநிலையை எட்டுவதற்கு காவித் துணியும், கற்றைச் சடையும் தேவையில்லை.
தூய அன்பு ஒன்றே துறவின் இலக்கணம்.

* இரவும் பகலும் மாறி மாறி வருவது போல,
உலகில் எதைத் தொட்டாலும் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரத்தான் செய்யும்.
அறிவினால் துன்பத்தைத் தள்ளி, இன்பத்தை எடுத்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.

* இறைவா! தேவாதிதேவனே!
இம்மண்ணில் உள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரஞ்செடி கொடிகள் அனைத்தும் துன்பம் நீங்கி இன்பம் பெற அருள்புரிவாயாக.
எல்லோரும் அன்பு வழியில் இணக்கமுடன் வாழ நீயே அருள்புரியவேண்டும்.

* தன்னைத் தானே கட்டுப்படுத்தி வாழ்தல்,
பிறருடைய துன்பத்தைப் போக்குதல்,
 பிறர் நலம் பேணுதல்,
இறைவனைப் போற்றுதல்
இந்நான்கு பண்புகளே ஒருவனுக்கு இன்றியமையாத கடமைகளாகும்.

* ஞானம் பெற விரும்புவோர் எல்லா உயிர்கள் மீதும் அன்பு காட்ட வேண்டும்.


புதன், மார்ச் 14, 2012

 மனதை நாம் இயக்க வேண்டும்


அன்றாட வாழ்க்கையிலே நமக்குள்ளே எத்தனையோ பிரச்சனைகளும்,
உடல் உபாதைகளும், மனப்போராட்டங்களும் வந்தும், சென்று கொண்டுதான் இருக்கின்றன.
இவை எல்லவற்றிற்குமே மூலகாரணம் நம் மனதுதான்.
நம் மனது நினைத்தால், நம்மை எப்படியும் மாற்றிவிடும்.
அதி அற்புத சக்தி கொண்டது.
மாபெரும் ஆற்றல் அதனுள் ஒளிந்து கொண்டு இருக்கிறது. மனதின் சக்தியை மழுமையாய் உணர்ந்து செயல்படுபவர்கள் மட்டுமெ நிச்சயம் வெற்றி பெறுகிறார்கள்.
மனது மாபெரும் சக்திதான்.
அந்த மனது நம்மை இயக்குவதைவிட,
நாம்தான் மனதை இயக்க வேண்டும்.
நமது அனைத்துக் காரியங்களைலும், நம்மை வழி நட்த்திச் செல்கிறது. நம்மைக்  கோழை ஆக்குவதும், வீரனாய் மாற்றுவதும் மனதின் செயலே. 
இயற்கை நமக்கு அளித்திருக்கும் மாபெரும் சக்தி மனதுக்கு உண்டு.
ஒன்றை மட்டும் நன்கு தெளிவாக மனதில் நிலைநிறுத்துங்கள்.
மனது மாபெரும் சக்திதான். அந்த மனது நம்மை இயக்குவதை விட, நாம் தான் மனதை இயக்க வேண்டும்.
இதையே கவியரசு கண்ணதாசன் அவர்கள் அழகாகப் பாடி உள்ளார்.
கண் போன  போக்கிலே,
கால் போகலாமா!
கால் போன போக்கிலே
மனம் போகலாமா!
மனம் போன போக்கிலே
மனிதர் போகலாமா!
மனிதர் போன பாதையை
மறந்து போகலாமா!
மனதைக் கட்டுப் படுத்தி வாழ்வது என்பதே மகத்தான கலையாகும். நம் சித்தர்கள் அனைவரும் மனவளக்கலையை அறிந்தவர்கள்.
மனம் ஒரு குரங்கு என்றும் கூறுவார்கள். ஏனெனில் அது ஒரு நிலையில் நிற்காது. குரங்கைப் போல் அங்கும் இங்கும் தாவிக் கொண்டே இருக்கும். அதைச் செய்வோமா, இதைச் செய்வோமா என சரியாக முடிவெடுக்காமல், கடைசியில் ஒன்றும் செய்யாமல் இருந்துவிடும். இல்லையென்றால் செய்ய வேண்டிய செயலையும் பாழாக்கிவிடும். இயற்கை படைத்துள்ள பஞ்ச பூதங்களின் சக்தியினைக் கூட ஓரளவிற்கு உணர்ந்துவிடலாம், ஆனால் மனிதனின் மனதை அறிவது சிரமமான காரியமாகும்.
மாபெரும் சக்தி கொண்ட கடவுளைப் போன்ற மனசு எங்கு இருக்கிறது. எப்படி நம்மை இயக்குகிறது ? புதிரான விசயமாகும்.
“ உடலில் வலு இல்லையெனினும்,
 மனதில் வலிமை இருந்தால் போதும்,
எடுக்கும் காரியம் வெற்றிதான்
ஒவ்வொரு நிமிடமும், பல வித்தியாசமான எண்ணங்களை விதைத்து, நம்மை ஆட்டிவைக்கும் மிக அற்புதமான சூத்திரதாரிதான் மனது.
மனதுக்கு மிஞ்சிய சக்தியே இல்லை. உண்மையைப் பொய்யாக்கவும், பொய்யை உண்மையாக்கவும் செய்யும் ஆற்றல் படைத்தது.
சோம்பித் திரிபவனுக்கும் புத்துணர்வு தந்து, எடுத்த காரியங்களில் வெற்றி பெற வைக்கும். ஒருவனின் வெற்றிக்குப் பின்னால், ஆணோ, பெண்ணோ இருக்கலாம் என்பார்கள். ஆனால், அவனின் வெற்றிக்கு அடித்தளமாய் அமைவது அவன் மனது மட்டுமே.
ஏனெனில், அவன் எடுக்கும் காரியங்களில் அவனை முழுமையாய் ஈடுபடுத்தி வேலை வாங்கச் செய்வது மனதே! உங்களுக்குள் இருக்கும் ஆற்றல்களை வெளிப்படத்துவீர்கள். அதற்கு முழுமுதற் காரணம் உங்கள் மனது மட்டுமே.
உங்களுக்குள் இருக்கும் அபூர்வ ஆற்றலைப் புரிந்து கொள்ளுங்கள் உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் சிறப்புடன் வாழவும், சாதிக்கவுமே பிறந்தவர்கள்.
சிலர் மனதைத் தளரவிட்டு, அமைதி எங்கே என அலைகிறார்கள். நீங்கள் விரும்பும் அமைதியை யாரும் உங்களுக்கு நிரந்தரமாக தரமுடியாது. அலைபாயும் மனதுடன் அலைய வேண்டியாதுதான்.
நமக்கு நாமே நீதிபதியாக இருந்து, நல்லது கெட்டது எதுவெனப் பகுத்துணர்ந்து செயல்பட வேண்டும். ஆதியில் நம் முன்னோர்கள் வனங்களில் எப்படியெல்லாமோ வாழ்ந்து, இயற்கையுடன் போராடி, இன்று படிப்படியாக நாகரீக வளர்ச்சி பெறவில்லையா?
வாழ்க்கையில் யாருக்குத்தான் பிரச்சனை இல்லை. அவரவர் வசதிற்கேற்ப பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். எங்கே ஓடி ஒளிய முடியும். பிரச்சனையை உங்களால் தீர்க்க முடியும் என நினைக்க வேண்டும்.
எல்லா உயிரினங்களுக்கும் கூட பிரச்சனைகள் இருக்கதான் செய்கின்றன. வரும் பிரச்சனைகளை நீக்க தெரிந்திருக்க வேண்டும் அவன்தான் மனிதன்.
உங்களுக்கு தேவையான மருந்து உங்களிடமே உள்ளது. அம்மருந்தை நீங்கள்தான் தேடி பிடிக்கவேண்டும்.

----க.கௌ. முத்தழகர்-----

செவ்வாய், ஜனவரி 24, 2012






சக்தியை வழிபட பயம் நீங்கும்

உலகத்திலன் நாயகியாக வீற்றிருப்பவளே
முத்துமாரியம்ம!

உன் பாதங்களை சரணமாக பற்றுகின்றோம்.

கலகம் செய்யும் அரக்கர் பலர் எங்கள் கருத்திலே புகுந்து விட்டார்.

உன் திருவடிகளே எமக்கு என்றும் நிலைபேறுதரும்

என்று எண்ணி சரணடைந்து விட்டோம் தாயே!

துணிகளை வெளுக்க உவர் மண்ணுண்டு,

தோல் வெளுக்க சாம்பளுண்டு,

நவரத்தின மணிகளைக் கடைய சாணையுண்டு.

ஆனால் மக்கள் மனம் வெளுக்க வழியில்லையே அம்மா!

எங்கள் பிணிகளைத் தீர்க்க மாற்றுண்டு.

ஆனால், ஏற்றத் தாழ்வைப் போக்க வழியில்லையே தாயே!

மனத்தூய்மை தந்து, ஏற்றத்தாழ்வை நீக்கி, அறிவு தெளிவாவதற்காக

உன்னையே அடைக்கலம் என தஞ்சம் புகுந்தோம் அம்மா!

தேடி உன்னையே சரண் புகுந்தோம்

தேச முத்துமாரியம்மா! ஒப்பில்லாதவளே!

உன் திருவடிகளுக்கே ஏவல்பணி செய்து உன் அருளால் நல்வாழ்வு பெறுவேன்.

சக்தி என்ற திருநாமத்தைப் பாடி பக்திப்பரவசத்துடன் போற்றி வழிபட்டால் 

மனபயம் அனைத்தும் நீங்கிவிடும்.

உலகத்திற்கு ஆதாரம் சக்தி என்று அருமறைகள் கூறுகின்றன.

எந்த தொழில் புரிந்தாலும் எல்லாமே அன்னையின் தொழில்களே.

இன்பத்தை வேண்டி நின்றால் அவள் மகிழ்ச்சியுடன் நமக்கு 

அருள்புரிவாள் தன்னை நம்பியவர்களுக்கு வரங்கள் பல தருவாள்.

- பாரதியார் -

திங்கள், ஜனவரி 09, 2012






மனம்

ஞானத்தை அடைய விரும்புவனுக்கு உள்ள ஒரே எதிரி அவனுடைய சொந்த மனமே


தன்னை வென்றவன் தனக்குத் தானே நண்பனாகிறான்


உன்னைக் காட்டிலும் உனக்கு சிறந்த நட்பு ஒருவனும் கிடையாது


உனக்கு கொடிய பகைவனும் நீயே


இந்த இரு தன்மைகளும் நம் மனத்திடையே உள்ளன


மனம் நமக்கு நட்பாகும் போது உலகமே நட்பாகத் தோன்றும்


நம்மை நாமே வெறுக்கும் போது அது பகையாக தெரியும்


ஒருவனுக்கு தன் வீடே சிறந்த வாசஸ்தலம் மலை, காடு என்று சுற்றித் திரியத் தேவையில்லை வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலைச்சிகரத்திற்குத் சென்றாலும் கடவுளைக் காணமுடியாது


உயிர்களுக்கு தீங்கிழைப்போர் உண்மையான பக்தராக மாட்டார்


எந்த உயிரையும் வெறுப்போரும் கடவுளின் தொண்டர் அல்ல


மாமிசம் புசிப்போருக்கு கடவுளை நெருங்க முடியாது


ஜீவஹிம்சை செய்பவரை கடவுள் மன்னிக்க மாட்டார்




உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையை கீதை ஆதாரமாகக் கொண்டது


தீமைகளை எதிர்தது போராடி, நன்மையை நிலைநாட்ட வேண்டும்.


கடவுளிடம் சரணாகதி அடைதலே யோகம்.


-பாரதியார்-.




















உழைப்பில் தான் சுகம்




உடலை வெற்றிகொள், 
அது எப்போதும் நீ சொன்னபடி கேட்க வெண்டும்,
அது சொன்னபடி நீ கேட்ககூடாது, 
அது மிருகம், நீ தேவன், 
அது யந்திரம், நீ இயக்குபவன்

எப்போதும் பாடுபடு,
எப்போதும் உழைத்து கொண்டிரு,
உழைப்பிலே சுகமிருக்கிறது.
வறுமை, நோவு முதலிய குட்டிப்பேய்கள் உழைப்பைக் கண்டவுடன் ஓடிப் பொய்விடும்.

தீர்க்காயுள், நோயின்மை, அறிவு, செல்வம் ஆகிய நான்கும் நமக்கு இன்றியமாதவை
அவற்றை இறைவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.

உன்னை மறந்துவிடு,
தெய்வத்தை மழுமையாக நம்பு
நியாயத்தையே உண்மையை பேசு இதைக் கடைபிடித்தால் எப்போதும் செய், அனைத்து இன்பங்களையும் பெறுவாய்.

கண்ணாடி போன்ற மனதில், 
அம்பாளை தியானம் செய்தால், 
அவளது சாயல் மனதில் படும் அதில் கிடைக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை

எப்போதும் சிவனையே நினைத்திருங்கள்,
வானத்தில் செல்லும் சூரியன் உச்சிவானிற்கு வந்த்தும் எப்படி கிணற்றுக்குள் தெரிகிறதோ,
அதே போல் உனக்குள் சிவனைக் காணலாம்.






பாரதியார்